sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

மாரியம்மன் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

மாரியம்மன் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்


ADDED : மே 28, 2024 07:03 AM

Google News

ADDED : மே 28, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று காலை தேரோட்டம் நடந்தது.

கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. பிறகு நாள்தோறும் இரவு, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 17ல் பூச்சொரிதல் விழா, 19ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள், அமராவதி ஆற்றில் அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி எடுத்து கொண்டு ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். இன்று இரவு, சிறப்பு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை மாலை, 5:30 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

பக்தர்கள் கூட்டம் கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன், 6ல் பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9 ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us