/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழையால் நிரம்பிய மாயனுார் கதவணை
/
தொடர் மழையால் நிரம்பிய மாயனுார் கதவணை
ADDED : அக் 14, 2024 05:16 AM
கரூர்: கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அம-ராவதி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் மாயனுார் கதவணையில் தேக்கி வைக்-கப்படுகிறது. பின், மூன்று பாசன வாய்க்கால் மற்றும் காவிரி-யாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரியாற்றில் திறக்-கப்படும் தண்ணீர், முக்கொம்பு அணை, கல்லணை மூலம், டெல்டா பாசன மாவட்டங்களுக்கு செல்கிறது.மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக காவிரி-யாற்றில் வினாடிக்கு, 12,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பவானி சாகர் அணை, நொய்யல் ஆற்று தண்ணீரும் காவிரியாற்றில் கலப்பதால், மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 15,458 கன அடி தண்ணீர் மாயனுார் கதவணைக்கு வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 19,253 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. சம்பா சாகுபடிக்காக காவி-ரியாற்றில், 18,483 கன அடியும், நான்கு பாசன வாய்க்காலில், 770 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
தொடர்மழை மற்றும் கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக, மாயனுார் கதவணை நிரம்பியுள்ளது. கதவணையில் ஒரு டி.எம்.சி., தண்ணீர் வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கட்-டளை பகுதி வரை கடல்போல் காட்சியளிக்கிறது. அதை, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள், கத-வணை சாலை வழியாக சென்று பார்த்து
வருகின்றனர்.