/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் சென்ற மெக்கானிக் பாலத்தில் மோதி பலி
/
பைக்கில் சென்ற மெக்கானிக் பாலத்தில் மோதி பலி
ADDED : நவ 22, 2024 01:27 AM
பைக்கில் சென்ற மெக்கானிக்
பாலத்தில் மோதி பலி
குளித்தலை, நவ. 22-
குளித்தலை அடுத்த, தோகைமலை செட்டி
தெருவை சேர்ந்தவர் மன்சூர் அலி, 50, 'டிவி' ரேடியோ மெக்கானிக். இவர் ஹீரோ ஹோண்டா பைக்கில் நேற்று முன்தினம் காலை, 6:30 மணியளவில் சொந்த வேலையாக சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். மஞ்ச புளிப்பட்டி. தண்ணீர் பந்தல் மேடு நெடுஞ்சாலை அருகே வரும்போது, வாலியாம்பட்டி ஆத்துவாரி பாலத்தில் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிந்தாமணிபட்டி போலீசார், சடத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, உயிரிழந்தவரின் மாமா பிச்சை
முகமது, 60, கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.