/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் மீட்பு
/
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் மீட்பு
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் மீட்பு
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் மீட்பு
ADDED : மே 11, 2025 01:02 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த சின்னரெட்டியப்பட்டி பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்டு கையில் கிடைக்கும் கற்களை எடுத்து கடைகளில் வீசுவதாகவும், அரைகுறை ஆடையுடன் சுற்றித்திரிவதாகவும், தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆய்வு செய்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், சாந்திவனம் மனநல காப்பக இயக்குனர் அரசப்பன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சாந்திவனம் மனநல காப்பகத்தின் மீட்பு குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா மற்றும் டிரைவர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்
திரிந்த பெண்ணை மீட்டு, திருச்சி, தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.