sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

/

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள கடைவீதியில், 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இதுகுறித்து, கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்டு, சாந்திவனத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென, சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் உதவியுடன், சாந்திவனம் மீட்புக்குழுவினர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வந்தனர். அவர், திருச்சி தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, மறுவாழ்வு பயிற்சிகளுக்காக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சீத்தப்பட்டியில் உள்ள சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு மாற்றப்படுவார் என, சாந்திவனம் மனநல காப்பகத்தின் நிர்வாக செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us