sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவிப்பு

/

அரவக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவிப்பு

அரவக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவிப்பு

அரவக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவிப்பு


ADDED : ஏப் 27, 2025 04:51 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சமுதாய கூடத்தில் இயங்கி வரும் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்-கீடு செய்து, அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு வெளி-யிட்டார்.

அரவக்குறிச்சியில், கடந்த, 2022ல் பொதுமக்கள், கல்வியாளர்-களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அரவக்குறிச்சி மாரி-யம்மன் கோவில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தற்காலிகமாக தொடங்கப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கருத்தில் கொண்டு, கல்லுாரிக்கு சொந்த கட்டடம் தேவை என, பெற்றோர், மாணவர்கள், கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், உயர் கல்வித்துறை மீதான விவாதம் சட்டச-பையில், நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய உயர்கல்வித்-துறை அமைச்சர் கோவி.செழியன், அரவக்குறிச்சி மற்றும் அந்-தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்த கட்-டடம் கட்டுவதற்கு, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, தெரிவித்தார். இதை அரவக்குறிச்சி பொதுமக்கள், கல்வியா-ளர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லுாரி சமு-தாய கூடத்தில் இயங்கி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை எளிய முறையில் நடத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. தற்போது, உயர்கல்வித்-துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளபடி, அரவக்-குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்த கட்-டடம் கட்டினால், அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக வெவ்வேறு கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், அரசு கல்லுாரியில் பயில ஆர்வம் காட்டுவர். இதனால் சேர்க்கை விகிதமும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us