ADDED : அக் 27, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அக். 27-
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், 63; இவர் நேற்று முன் தினம் காலை, வெண்ணைமலை சாலையில், சைக்கிள் கேரியரில் மொபைல் போனை வைத்து விட்டு, நின்று கொண்டிருந்தார். அப்போது, டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் மொபட்டில் சென்ற, கரூரை சேர்ந்த பழனி பாண்டி, 19, சூர்யா, 19, ஆகியோர், மொபைல் போனை திருடி சென்றனர்.
இதுகுறித்து, கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பழனிபாண்டி, சூர்யா ஆகியோரை, வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.