sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி

/

பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி

பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி

பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி


ADDED : மே 29, 2024 07:23 AM

Google News

ADDED : மே 29, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகளிடம் இருந்து, மொபைல் போன் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது. மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் மொபைல் போன் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏறும் போது, அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல்களை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில் உள்ள, புறக்காவல் நிலையத்தில் காலை நேரங்களில் போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், மொபைல் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, புறக்காவல் நிலையத்தில் நாள்தோறும் போலீசாரை பணியில் நியமித்து, காலை நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்டில், ரோந்து பணியில் ஈடுபட வைப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us