sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூஜை பொருட்கள் விற்பனையில் போட்டி கடையை சேதப்படுத்திய தாய்,மகள் கைது

/

பூஜை பொருட்கள் விற்பனையில் போட்டி கடையை சேதப்படுத்திய தாய்,மகள் கைது

பூஜை பொருட்கள் விற்பனையில் போட்டி கடையை சேதப்படுத்திய தாய்,மகள் கைது

பூஜை பொருட்கள் விற்பனையில் போட்டி கடையை சேதப்படுத்திய தாய்,மகள் கைது


ADDED : ஜூலை 06, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் அருகே தொழில் போட்டியால், பூஜை பொருட்கள் கடையை தாய், மகள் அடித்து சூறையாடியதால் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் அருகில் சரவணன், 46, என்பவர் வாடகை கட்டடத்தில் சாமி பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் இரண்டு ஆண்டுகளாக, கடையை பொது ஏலம் எடுத்து நடத்தி வந்தார். கோவில் அருகில் உள்ள வீட்டின் வளாகத்தில், பாக்கியலட்சுமி, 50, என்பவர் பூஜை பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

நடப்பாண்டு பொதுக்கடையை, பாக்கியலட்சுமி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தார். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் வாடகை கட்டடத்தில், சரவணன் நடத்தி வரும் கடைக்குள், பாக்கியலட்சுமி, அவரது மகள் சுவாதி புகுந்து, தடியால் கடையில் இருந்த மூன்று பிரிட்ஜ் மற்றும் கண்ணாடி ரேக்குகளை உடைத்து, பூஜை பொருட்களை வெளியே வீசி ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களை கடையில் இருந்த சரவணன், தனது மொபைல்போனில் வீடியோ எடுத்தார். இது தற்போது குளித்தலை பகுதியில், வைராகி வருகிறது.

இது குறித்து சரவணன் கொடுத்த புகார்படி, குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, தாய், மகள் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us