ADDED : நவ 09, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, நவ. 9-
கிருஷ்ணராயபுரம் அருகே, தாய், மகளை காணவில்லை என, போலீசில் கணவர் புகாரளித்துள்ளார்.
குளித்தலை அடுத்த, கிருஷ்ணாயபுரம் டவுன் பஞ்., கொல்லத்தெருவை சேர்ந்தவர் மலைக்கொழுந்தன், 40, விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா, 28, மகள் பிரித்திகா ஸ்ரீ , 10, லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த அக்., 30 மாலை, 4:00 மணியளவில் சுஜாதா தனக்கு சொந்தமான ஸ்கூட்டி மொபட்டில், தாய் வீட்டிற்கு தனது மகளை அழைத்துச் செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தனது மனைவி, மகளை காணவில்லை என கணவர் மலைக்கொழுந்தன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தாய், மகளை தேடி வருகின்றனர்.