sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் கடத்தப்பட்டதாக போலீசில் தாய் புகார்

/

மகள் கடத்தப்பட்டதாக போலீசில் தாய் புகார்

மகள் கடத்தப்பட்டதாக போலீசில் தாய் புகார்

மகள் கடத்தப்பட்டதாக போலீசில் தாய் புகார்


ADDED : அக் 09, 2025 12:51 AM

Google News

ADDED : அக் 09, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தர வேண்டும், போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

குளித்தலை அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கிருத்திகா, 38. விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்களது, 17 வயது மகள் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த, 6ம் தேதி இரவு 7:30 மணியளவில் வீட்டில் இருந்த போது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என, லாலாபேட்டை போலீசில் தாய் புகார் கொடுக்க சென்றார். அப்போது, அவரது போனுக்கு பிள்ளாபாளையத்தை சேர்ந்த திலக் என்பவர், மகளை கடத்தி வைத்திருப்பதாகவும், மீண்டும் போலீசில் சென்றால் உங்கள் மகளை விடுவிக்க முடியாது என, தகாத வார்த்தைகள் பேசி, மொபைல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இது குறித்து, மாணவியின் தாய் கிருத்திகா கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திலக் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us