sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

/

குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 07, 2024 07:24 AM

Google News

ADDED : மே 07, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது குகை வழிப்பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாக வெங்கமேடு, பெரிய குளத்துப்பாளையம், சின்ன குளத்துப்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் டூவீலர், கார்களில் கரூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக குகை வழிப்பாதையில், தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, பெரிய குளத்துப் பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில், சேதம் அடைந்துள்ள, தரைத்தளத்தை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us