sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

/

ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 15, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 15-

கரூர் அருகே ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - சேலம் இடையே, புதிதாக ரயில்வே பாதை அமைக்கப்பட்டு, 2013 முதல் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாங்கல்-மண்மங்கலம் இடையே, ரயில்வே பாதை அமைக்கும்போது, மாரி கவுண்டன்பாளையத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், ரயில்வே பாலம் கட்டப்பட்டது. ஆனால், அப்போது மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், வாங்கல்-மோகனுார் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்ட பிறகு, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள், மாரி கவுண்டன்பாளையம் ரயில்வே பாலம் வழியாக சென்று வருகின்றன.

தற்போது, ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, மண்மங்கலம்-வாங்கல் இடையே மாரிகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில், உடனடியாக மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us