/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
/
முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 22, 2025 01:46 AM
கரூர்:முஸ்லிம் மாணவ-, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க, கல்வி உதவித்தொகை பெற அக்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில் வெளிநாடு சென்று படிக்க முஸ்லிம் மாணவ-, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, நடப்பு கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க, உலக தரவரிசையில், 250 இடங்களுக்குள் உள்ள பல்கலையில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்; பட்டப் படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம் உள்பட முதுகலை பட்டபடிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில், https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல் தளம் சேப்பாக்கம், சென்னை--600005 என்ற முகவரிக்கு அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.