sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமியர் மும்முரம்

/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமியர் மும்முரம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமியர் மும்முரம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமியர் மும்முரம்


ADDED : மே 29, 2025 01:27 AM

Google News

ADDED : மே 29, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குர்பானிக்கு ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமியர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் வசித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகை ஜூன், 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஒன்று முதல் மூன்று ஆடுகளுக்கு மேல் குர்பானி கொடுப்பர். இதற்காக, தனியார் தோட்டங்களில் குர்பானிக்கு என்று ஆடுகள் வளர்க்கப்படுகிறது. குர்பானிக்கு ஆடு வாங்குபவர்கள், தரமான அதிக எடை உள்ள ஆடுகளை வாங்குவர்.

இதற்காக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர், நேரடியாக தோட்டத்துக்கு சென்று ஆடுகளை வாங்கி வருகின்றனர். 12 முதல், 22 கிலோ வரை எடையுள்ள ஆடுகள், 15 ஆயிரத்திலிருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, பள்ளப்பட்டியில் சிறப்பு ஆட்டுச்சந்தையும் நடைபெறும்.

இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆடு வியாபாரிகள், குர்பானி கொடுப்பதற்கென்றே வளர்க்கப்பட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வர். பக்ரீத் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், குர்பானிக்கு ஆடுகள் வாங்குவதில்

இஸ்லாமியர் தீவிரம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us