sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய அளவில் தடகள போட்டி கரூர் மாவட்ட மாணவர் தகுதி

/

தேசிய அளவில் தடகள போட்டி கரூர் மாவட்ட மாணவர் தகுதி

தேசிய அளவில் தடகள போட்டி கரூர் மாவட்ட மாணவர் தகுதி

தேசிய அளவில் தடகள போட்டி கரூர் மாவட்ட மாணவர் தகுதி


ADDED : செப் 29, 2024 01:16 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய அளவில் தடகள போட்டி

கரூர் மாவட்ட மாணவர் தகுதி

கரூர், செப். 29--

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற கரூர் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில இளையோருக்கான தடகள போட்டிகள் செப்., 19- முதல், 22- வரை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து, 3, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கரூர் மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 80 பேர் பங்கேற்றனர். 20 வயதுக்குள்பட்ட, 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில், கரூர் மாணவர் விக்னேஷ், 52.20 வினாடிகள் ஓடிவந்து தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அக். 25 -முதல், 29- வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வுபெற்றுள்ளார். 20 வயதுக்குள்பட்ட பிரிவில் தொடர் ஓட்டத்தில் கரூர் மாவட்ட அணி வீரர்கள் தீபக் கிஷோர், தருண்ராஜ், விக்னேஷ், அரவிந்த் ஆகியோர் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றனர்

சிறப்பிடம் பிடித்த வீரர்களுக்கு, தேசிய தடகள சம்மேளன இணைச் செயலாளர் லதா, தடகள சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us