/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாடாளும் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
/
நாடாளும் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 23, 2025 05:21 AM
கரூர்: கரூர் மாவட்ட நாடாளும் மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்; ஆட்சியமங்கலம் கிராமத்தில் இலவச வீட்டு-மனை பட்டா வழங்க வேண்டும்;
ஜல்லிப்பட்டி ஊராட்சி ஒன்-றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்; அரசு உதவி மருத்துவமனைகளில் நிரந்தரமாக, டாக்-டர்களை நியமிக்க வேண்டும்; வெள்ளியணை தென்பாகம் பகுதி மக்களுக்கு, காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.நிறுவன தலைவர் செல்வராசு, மாநில தொழிலாளர் அணி செய-லாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைய ராஜா, பொரு-ளாளர் வசந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.