sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

/

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா


ADDED : ஜூலை 27, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் சிவனடியார் திருக்கூட்டம், 30 வது ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்களின், 29 வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபி ேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், 63 நாயன்மார்களின் திருவீதி உலா, திருமுறை இன்னிசையுடன் நடந்தது.

இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிவனடியார் திருக்கூட்டம், 30 வது ஆண்டு விழா, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் புகழ் சோழர் மண்டபத்தில் நடக்கிறது. அதில், திருவாசகத்தில் அடியார் பெருமை என்ற தலைப்பில் பேராசிரியர் மாணிக்கவாசகம், 'அஞ்சேல் என்று அருள் செய்வான்' என்ற தலைப்பில் சைவ சித்தாந்த ஆசிரியர் சவுரிராசன் உள்பட பலர், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை ஓதுவார் மூர்த்தி ஜெகநாதனின், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us