sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு

/

இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு

இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு

இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு


ADDED : மே 04, 2025 02:10 AM

Google News

ADDED : மே 04, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில், இன்று நடக்கும் நீட் தேர்வில், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ேஹாமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2025--26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் (இரண்டு மையத்தில்) 960 பேர், கரூர் வெள்ளியணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 299 பேர், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 337 பேர் என மொத்தம், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு பிற்பகல், 2:00 மணிக்கு தொடங்கி மாலை, 5:20 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்​தி, குஜ​ராத்தி உட்பட, 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்​தம், 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.

பின்பற்ற வேண்டிய நடைமுறை

தேர்வு மையத்தில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​கள் குறித்து, ஹால்​டிக்​ கெட்டில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன. அதன்​படி, தேர்வு மையத்​துக்குள் செல்ல காலை, 11:30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி தரப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம், 1:30 மணிக்குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பின் வருபவருக்கு எக்​காரணம் கொண்​டும் அனு​மதி இல்லை.

ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். பெண் தேர்வர்கள் ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் எளிய மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து வர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் தேர்வு நடக்கும் நான்கு மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us