/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5 ரோடு அருகில் பாதாள சாக்கடை பள்ளம் 15 நாட்களாக சரி செய்யாமல் அலட்சியம்
/
5 ரோடு அருகில் பாதாள சாக்கடை பள்ளம் 15 நாட்களாக சரி செய்யாமல் அலட்சியம்
5 ரோடு அருகில் பாதாள சாக்கடை பள்ளம் 15 நாட்களாக சரி செய்யாமல் அலட்சியம்
5 ரோடு அருகில் பாதாள சாக்கடை பள்ளம் 15 நாட்களாக சரி செய்யாமல் அலட்சியம்
ADDED : அக் 31, 2025 12:35 AM
கரூர்,  கரூர் ஐந்து ரோடு அருகில் உள்ள பாதாள சாக்கடை பள்ளம், 15 நாட்களுக்கு மேலாக சரி செய்யப்படாமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன.
இந்நிலையில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பல முறை பள்ளம் ஏற்பட்டது. அதை, பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் போடப்பட்டு சரி செய்யப்பட்டது.பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது, சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில், செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், பள்ளம் விழுந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இந்நிலையில், கரூர் ஐந்து ரோடு கோடீஸ்வரர் கோவில் முன்புறம் மீண்டும் பள்ளம் விழுந்துள்ளது. இங்கு பள்ளம் ஏற்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகியும் சரி செய்யப்படவில்லை. அந்த இடத்தை சுற்றி பேரிகார்டு வைத்துள்ளனர். முக்கிய சாலையாக இருப்பதால், உடனடியாக பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை குழாயில் அழுத்தம் காரணமாக பள்ளம் ஏற்படும் போதெல்லாம், தற்காலிகமாக தீர்வை மட்டுமே ஏற்படுத்துகின்றனர். எனவே இப்போதாவது, பாதாள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

