/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மார்கழி மாத அமாவாசை; அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
/
மார்கழி மாத அமாவாசை; அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
மார்கழி மாத அமாவாசை; அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
மார்கழி மாத அமாவாசை; அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், மார்கழி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
அதை தொடர்ந்து, சிறப்பு சந்தன காப்பு, பூக்கள் அலங்காரத்தில், மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், வேலாயுதம்பாளையம் சேமங்கி மஹா மாரியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், பவித்திரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழூரில் உள்ள மேகமாலீஸ்வரர் கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களி லும், மார்கழி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அபிேஷகம் நடந்தது.