sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆக்கிரமிப்பு மண்டபத்துக்கு 'சீல்' பொதுமக்கள் சாலை மறியல்

/

ஆக்கிரமிப்பு மண்டபத்துக்கு 'சீல்' பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு மண்டபத்துக்கு 'சீல்' பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு மண்டபத்துக்கு 'சீல்' பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : செப் 20, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம், வேதாந்தபுரம் பகுதியில், வேதாந்த சிந்தனை சமாஜ மடத்திற்கு சொந்தமாக, 9 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேல், 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த குடியிருப்பு மைய பகுதியில் வறண்ட கிணறு ஒன்று இருந்தது.

இந்த கிணற்றை மூடி, அப்பகுதி பொதுமக்கள் விநாயகருக்கு கோவில் ஒன்றும், திருமண மண்டபமும் கட்டி, 25 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வந்தனர். இந்நிலையில், வேதாந்த சிந்தனை சமாஜ மடத்தை சேர்ந்த நிர்வாகிகள், 'மண்டபம் எங்களுக்கு சொந்தமானது' என, தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் கருத்துமோதல் ஏற்பட்டது.

இதனால், மடத்தின் நிர்வாகிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில், திருமண மண்டபம் மடத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை, நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் சித்தி விநாயகர் திருமண மண்டபத்திற்கு, 'சீல்' வைத்தனர்.

அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் இன்ஸ்பெக்டர்(பொ) சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'நீதிமன்றத்தை நாடி பிரச்னையை தீர்த்துக்கொள்ளுமாறு கூறியதை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us