ADDED : செப் 03, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
கரூர்:புகழூர் நகராட்சியில், நான்கு வகையாக கழிவுகள் பிரிக்கப்படும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில்
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026ன் படி, வீடுகளில் இருந்து
பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் முறை, உள்ளாட்சி அமைப்புகளில்
நடந்து வருகிறது.
அதன்படி, புகழூர் நகராட்சி இரண்டாவது வார்டு
மலைநகர், 13 வது வார்டு வள்ளுவர் நகர் பகுதியில், துாய்மை பணியாளர்கள்
வீடு வீடாக சென்று குப்பைகளை பிரித்து வாங்கும் பணியை, குளித்தலை
நகராட்சி ஆணையாளர் சுதர்சன் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி
பொறியாளர் தியாகராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
