/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தடையில் தவறி விழுந்த முதியவர் பலி
/
வேகத்தடையில் தவறி விழுந்த முதியவர் பலி
ADDED : அக் 16, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடையில் தவறி
விழுந்த முதியவர் பலி
கரூர், அக். 16-
சின்னதாராபுரம் அருகே, டூவீலரில் இருந்து வேகத்தடையில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி, 65; இவர் கடந்த, 13ல் டி.வி.எஸ்., மொபட்டில் அகிலாண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி வேகத்தடையில் ராமசாமி தவறி விழுந்தார். அதில், பலத்த காயம் அடைந்த ராமசாமி, திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.