sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி

/

16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி

16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி

16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி


ADDED : ஜூலை 14, 2025 03:55 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, வரும், 16ல் தமிழ் வளர்ச்சித்-துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வரும், 16ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது. இதில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிய-ருக்கு காலை, 9:30 முதல், 1:00 மணி வரையும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மதியம், 1:30 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்க-ளுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்கள், இரண்டு பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அந்தந்த நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கலந்துகொள்ள வேண்டும். விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்-, 04324-255077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us