ADDED : அக் 04, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் ;வேலாயுதம்பாளையம் அருகே, அடையாளம் தெரியாத கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம் மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராசு, 55; இவர் கடந்த, 1ம் தேதி இரவு சேலம் சாலை தளவாப்பாளையம் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார், ராசு மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த ராசு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.