/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்
/
லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்
ADDED : டிச 28, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை பகுதியில், நெல் அறுவடை பணி நடந்து வரு-கிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கருப்பத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனர்.
கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயல்களில் நாற்றுகள் நடப்-பட்டு களைகளை அகற்றி இயற்கை உரம் வைத்து சாகுபடி செய்-யப்பட்டது.
தற்போது நெற்கதிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடை செய்யும் வகையில் உள்ளது. மேலும் விளைந்த நெற்கதிர்கள் மழைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், விவசாயிகள் டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.