sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டி மாணவர்கள் மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு

/

பள்ளப்பட்டி மாணவர்கள் மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு

பள்ளப்பட்டி மாணவர்கள் மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு

பள்ளப்பட்டி மாணவர்கள் மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு


ADDED : அக் 14, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, கரூரில் நடந்த மாவட்ட அளவிலான, பூப்பந்தாட்ட போட்டியில் மூன்று பிரிவு களிலும் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

கரூர் வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி மேட்டுதிருகாம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இப்போட்டியில்

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் போட்டியில் தாந்தோனி குறுவட்டம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் மோதி, 35-10, 35-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றனர்.

இறுதி போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி மேட்டுதிருகாம்புலியூர் அணியுடன் 35-30, 35-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதேபோல், 17 வயது பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளப்பட்டி மேல்

நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us