/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
/
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
ADDED : நவ 01, 2024 01:45 AM
அரவக்குறிச்சி, நவ. 1-
அரவக்குறிச்சி ஊருக்குள் வந்து செல்லாமல், பைபாஸில் செல்லும் பஸ்கள் பயணிகளை இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதால், பயணிகள் பீதியில் உள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து வணிகர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பஸ்கள் அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்வதில்லை. இரவு 10:00 மணி வரை கரூரிலிருந்து அரவக்குறிச்சி வழியாக பஸ்கள் இயக்கப்
படுகிறது.
அதற்கு பின், தேசிய நெடுஞ்சாலையில் மதுரை செல்லும் பஸ்களில் ஏறி, அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரவக்குறிச்சி நகருக்குள் செல்ல, 3 கி.மீ., தொலைவு உள்ளது. இந்த சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், இரவில் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கும் பயணிகள் பீதியில் உள்ளனர். ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சத்திலே இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள், அரவக்குறிச்சி வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.