sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கலெக்டர் அலுவலகம் எதிரே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்கூடம்

/

கலெக்டர் அலுவலகம் எதிரே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்கூடம்

கலெக்டர் அலுவலகம் எதிரே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்கூடம்

கலெக்டர் அலுவலகம் எதிரே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்கூடம்


ADDED : மே 01, 2025 01:24 AM

Google News

ADDED : மே 01, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், நிழற்கூடம் உள்ளது. அதை, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - திண்டுக்கல் பழைய சாலை கலெக்டர் அலுவலகம் எதிரே, சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில், கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல் பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர்.

இந்நிலையில், பயணிகள் நிழற்கூட சுற்றுச்சுவர் சேதமடைந்தது. மேலும், நிழற்கூடத்தை சுற்றி, கழிவுநீர் வாய்க்கால் சமீபத்தில் கட்டப்பட்டது. இதனால், நிழற்கூடம் தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், நிழற்கூடம் முன் நிறுத்தப்படுவது இல்லை.

நிழற்கூடம் இல்லாத இடத்தில், பஸ்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் - திண்டுக்கல் பழைய சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரே, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us