/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்
ADDED : ஜூலை 18, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை நகராட்சியின் தற்காலிக வாடகை பஸ் ஸ்டாண்டில், 30க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த கடைகளில், 70 சதவீதம் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. சிறிது துாரம் நடந்து சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பஸ்சுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால், அரசு உத்தரவுப்படி அனைத்து கடைகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, பயணிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.