/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
/
கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 24, 2025 01:31 AM
கரூர், திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 28ம் தேதி கரூரில் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சங்கர வித்யாலயா பள்ளியில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு, குறைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.