ADDED : நவ 14, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், டிச.,12ல், ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட
ரங்கில், ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் கூட்டம் டிச., 12 காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் கோயம்புத்துார் கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் கலந்து கொள்கிறார். ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை (இரட்டை பிரதிகளில்), கரூர் கலெக்டருக்கு, ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில், அஞ்சல் மூலமாகவோ அல்லது கலெக்டர் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நேரிலோ டிச., 10.க்குள் சமர்ப்பிக்கலாம். இல்லையெனில்,நேரடியாக கூட்டத்தில் மனு அளிக்கலாம்.

