/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது கழிப்பிடம் கட்ட பகுதிவாசிகள் கோரிக்கை
/
பொது கழிப்பிடம் கட்ட பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : நவ 14, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வடக்கு தெரு பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோரின் வீடுகளில், கழிப்பிடம் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் நங்காஞ்சி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அசுத்தமாக இருக்கும் ஆற்றில் காலை கடனை கழிப்பதால், மேலும் அசுத்தமாகி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நங்காஞ்சி ஆற்றுக்கு செல்லும் பாதையில், பொது கழிப்பிடம் கட்ட இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

