/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
/
வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
வாங்கல் சாலையோரம் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
ADDED : செப் 01, 2025 04:16 AM
கரூர்:கரூர், வாங்கல் சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்-பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நி-லையில், கரூர், வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்-டியதும், சாலையோரம் அதிகளவு கோழி கழிவுகள் மூட்டை மூட்-டையாக இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வாங்கல் சாலையோரம் கழிவுகளை தொடர்ந்து கொட்டி செல்கின்றனர். இதனால், கடும் துார்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகளும், இப்பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்-துக்குள்ளாகி வருகின்றனர். வாங்கல் சாலையோரம் இரவு நேரங்-களில் மட்டும் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை கண்கா-ணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.