/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
/
உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 04:30 AM
கரூர்: கரூரில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளில் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் அவற்றின் தொல்-லையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த, திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித்திரிகின்றன.
பொதுமக்கள், கால்
நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளின் மைய தடுப்புச்சு-வரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்-களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தெரு நாய்கள் ஹாயாக சுற்றித்திரிந்து அங்கேயே தங்கி விடுகின் றன. நாய்-களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.