sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 28, 2025 08:41 AM

Google News

ADDED : செப் 28, 2025 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சின்னதாராபுரத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பயணிகள் சாலையோரம் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது.

அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் பகுதியில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு பள்ளிகள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மின்வாரிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், காவல் நிலையம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கரூர் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக செல்கின்றனர். இருப்பினும் சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல், சாலையோரம் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கரூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலை என்பதால், அதிகளவிலான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக காலை 7:00 முதல் 9:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் கல்குவாரிகள் செயல்படுவதால் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில், சாலையோரங்களில் செல்லும் பயணிகள் மீது, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்துகளும் நடந்து வருகிறது.

எனவே, இப்பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us