/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 09, 2024 06:28 AM
கரூர் : க.பரமத்தி அருகே பராமரிப்பு இல்லாத, பூங்காவை சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பவுத்திரத்தில், பொதுமக்கள் பயன் பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.
அதில் சிறுவர், சிறுமிகள் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்களும் இருந்தன. இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. கிராமப்பகுதியான பவுத்திரத்தில் வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் பழுதான உபகரணங்களை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம்.