sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

/

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 01, 2024 01:43 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 1-

ஆத்துப்பாளையம் அணையை, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சாயக்கழிவு பிரச்சனையால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை காரணமாக கடந்த, 2019ல், 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழுகொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது.

அப்போது, அணை நிரம்பிய நிலையில், கடல் போல காட்சியளிக்கும் ஆத்துப்பாளையம் அணையை பார்வையிட திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது, மழை காரணமாக ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில், ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், ஆத்துப்பாளையம் அணைப்பகுதியில், பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை சுற்றுலா தலமாக மாறும் போது, கரூர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளான க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.






      Dinamalar
      Follow us