sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்

/

ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்

ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்

ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்


ADDED : மே 18, 2025 06:29 AM

Google News

ADDED : மே 18, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை வழியில், புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது. திருச்சி உள்-ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இருந்து கரூர் வழியாக ஈரோடு மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நாள்தோறும், 15க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்-றன.

ரயில்கள் செல்லும் போது, புகழூரில் உள்ள கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில் வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பகுதி-களில் இருந்து, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வாகனங்-களில் விரைவாக செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் அவ-திப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

புகழூரில், டி.என்.பி.எல்., காகித ஆலை செயல்படுகிறது. மேலும் அந்த பகுதிளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்-போது கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடம், மின் தடமாக மாற்-றப்பட்டுள்ளது. அதிக ரயில்கள் செல்ல துவங்கியுள்ளன. எதிர்கா-லத்தில் ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், புகழூரில், கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us