sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செல்லாத பஸ்களால் மக்கள் அவதி

/

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செல்லாத பஸ்களால் மக்கள் அவதி

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செல்லாத பஸ்களால் மக்கள் அவதி

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செல்லாத பஸ்களால் மக்கள் அவதி


ADDED : டிச 14, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 14, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 14-

பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. கரூர்-சேலம் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடத்தில், வந்தே பாரத் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை தவிர, நாமக்கல், குளித்தலை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை நிறுவனத்துக்கு வேலைக்கு வருகின்றனர்.

ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வது இல்லை. இதனால் பயணிகள், குழந்தைகள், லக்கேஜ் பொருட்களுடன், 500 மீட்டர் துாரம் நடந்து சென்று, பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களை அனுமதிக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us