sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலை அமைக்க தாமதம் ஜல்லிகற்களால் மக்கள் அவதி

/

தார்ச்சாலை அமைக்க தாமதம் ஜல்லிகற்களால் மக்கள் அவதி

தார்ச்சாலை அமைக்க தாமதம் ஜல்லிகற்களால் மக்கள் அவதி

தார்ச்சாலை அமைக்க தாமதம் ஜல்லிகற்களால் மக்கள் அவதி


ADDED : மே 02, 2024 11:43 AM

Google News

ADDED : மே 02, 2024 11:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே காவிரியாற்றுக்கு செல்லும் சாலையில், சிமென்ட் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு, பல மாதங்கள் ஆகிறது. தார்ச்சாலை அமைக்காததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் காவிரியாற்று பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள், காவிரியாற்றுக்கு குளிக்கவும், துணிகள் துவைக்கவும் நாள்தோறும் சென்று வருகின்றனர்.

காவிரியாற்று பகுதி நீரேற்றும் நிலையங்களுக்கு, ஊழியர்கள் சென்று வருகின்றனர். ஆனால், காவிரியாற்றுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

இதனால், புதிதாக தார்ச்சாலை அமைக்க, பல மாதங்களுக்கு முன் சிமென்ட் கலவை முதலில் கொட்டப்பட்டு, சமன்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், லேசான மழை பெய்தது காரணமாக சிமென்ட் கரைந்து, வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் சாலையில் இருக்கும் நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, புகளூரில் இருந்து காவிரியாற்றுக்கு செல்லும் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us