ADDED : மார் 15, 2024 03:58 AM
அ நிறம் | அளவு
கரூர்: க.பரமத்தி பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மதிய நேரத்தில், சாலையில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்துள்ளது. ஆஸ்பஸ்டாஸ் வீடுகளில் வசிப்பவர்கள், வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
