/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
/
சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ADDED : செப் 30, 2025 01:01 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் இருந்து, பள்ளப்பட்டி செல்லும் சாலையில், அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே உள்ள சாலையில், தேங்கி நிற்கும் கழிவு நீரால், பொதுமக்கள் நோய் தொற்று அபாயத்தில் சிக்கியுள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி, அரசு போக்குவரத்து கழக அலுவலகம் ஆகியவை உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் சரியாக கட்டப்படாததால், குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையில் வந்து தேங்குகிறது.
பள்ளியின் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோருக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது
பேரூராட்சி அதிகாரிகள், கழிவுநீர் தேக்கத்தை நேரில் பார்த்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.