ADDED : ஆக 18, 2026 05:03 AM
கரூர்; 'ரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு அடிப்படை வசதி தேவை' என, சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்-தனர்.
அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், நெரூர் அருகில் ரங்கநாதன்-பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில், இருபா-லரும் படித்து வருகின்றனர். நுாறு ஆண்டுகள் இயங்கி வரும் பள்ளியில், சுற்றுச்சுவர் அமைக்-கப்படவில்லை. பள்ளி நுழைவாயில் வகுப்ப-றைக்கு செல்லும் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இட நெருக்கடி காரணமாக கூடுதல் வகுப்பறை கேட்டு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வகுப்பறை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்-பட்டு, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட-வில்லை. இதுபோன்ற அடிப்படை வசதி-யில்லை என்பதால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். போர்கால அடிப்படை பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
