sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு

/

குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு

குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு

குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு


ADDED : ஜூலை 09, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குடிநீர் விநியோகம் செய்ய கோரி, கரூர் வேட்டமங்கலம் அருகில், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தலைமையில், பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குசாலை, வெள்ளியம்பாளையம், கணபதிபாளையம், அண்ணாநகர், பங்களா நகர் மற்றும் நெய்க்குப்பம் பகுதிகளில், 600 குடும்பங்களை சேர்ந்த, 1,800 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், மரவாபாளையம் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன், 30ல் மின் மோட்டார் பழுதடைந்ததால் நீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை மோட்டார் பழுதாகி குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். உடனடி தீர்வாக லாரி மற்றும் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். விரைவில் மின்மோட்டாரை பழுது நீக்கி, சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us