ADDED : ஆக 13, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தரகம்பட்டியில், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செய-லாளர் வடிவேல் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கடவூர் ஊராட்சி, தரகம்பட்டியில் நீர் வரத்து வாரிகள் உள்ளன. இதிலிந்து மணல் திருடப்பட்டு வருகிறது. இங்கிருந்து அள்ளப்படும் மணல், ஒரு இடத்தில் மலை போல குவித்து வைக்கப்படுகிறது. பின், பல்வேறு இடங்-களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

