/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு
/
தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு
ADDED : டிச 30, 2025 05:25 AM
குளித்தலை: காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், சிவாலயங்களில் சிறந்த தலமாக விளங்குகிறது. காசிக்கு நிகராக, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால், காசியில் தரிசனம் செய்ததற்கு நிகராகும். கோவில் எதிரே, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவிரி ஆற்று படுகைக்கு செல்லும் சாலை, முக்கிய பாதையாக உள்ளது. ஆனால், இந்த மண் சாலையாகவும், திட்டுகளாகவும் இருப்பதால், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
வரும் தைப்பூச திருவிழாவின்போது, தமிழகத்தில் உள்ள, 8 சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி, காவிரி ஆற்றுப்படுகையில் நடைபெற உள்ளது. மக்கள் எளிதாக சென்றுவரும் வகையில், தார்ச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

