/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர்-உன்னியூர் பாலம் வழியாக பஸ் இயக்க கலெக்டரிடம் மனு
/
நெரூர்-உன்னியூர் பாலம் வழியாக பஸ் இயக்க கலெக்டரிடம் மனு
நெரூர்-உன்னியூர் பாலம் வழியாக பஸ் இயக்க கலெக்டரிடம் மனு
நெரூர்-உன்னியூர் பாலம் வழியாக பஸ் இயக்க கலெக்டரிடம் மனு
ADDED : டிச 23, 2025 05:29 AM
கரூர்: நெரூர்-உன்னியூர் பாலம் வழியாக பஸ் இயக்க வேண்டும் என, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர், கரூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் நெரூர், திருச்சி மாவட்டம் -உன்-னியூர் இடையே, காவிரியாற்றின் குறுக்கே உயர்-மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு, நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட-வில்லை. கரூரில் இருந்து ஐந்து ரோடு, பஞ்சமா-தேவி, ஒத்தக்கடை, சோமூர், அச்சமாபுரம், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கோவில் வழியாக திருச்சி மாவட்டம் உன்னியூர், காட்டுப்புத்துார் வரை பஸ் இயக்க வேண்டும். மேலும் கரூரி, நெரூர் வழியாக முசிறி வரை நேர் வழியில் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு பஸ்கள் இயக்கப்-பட்டால், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்-களில் இருந்து, நெரூரிலுள்ள சதாசிவ பிரம்மேந்-திரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்க-ளுக்கு வந்து செல்ல வசதியாக அமையும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

