/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : ஏப் 07, 2025 02:23 AM
குளித்தலை: குளித்தலை பா.ஜ., ஒன்றிய செயலர் ஹரி ராம்குமார், கரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி-யிருப்பதாவது:
குளித்தலை அடுத்த, வைகைநல்லுார், ராஜேந்திரம், வதியம், மணத்தட்டை உள்ளிட்ட, 13 பஞ்சாயத்துகளில் மத்திய அரசு திட்-டத்தில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரும்பு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளை முறையாக பயன்படுத்தாமல், பொது மக்கள் திறந்த வெளியில் கொட்டி வரு-கின்றனர். இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்-பட்டு வருகிறது. மேலும், மூன்று சக்கர ஆட்டோ பழுது சரி செய்யாமல் சேதம் ஏற்பட்டுள்ளது. இல்ல கழிப்பறை, குடிநீர் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. பற்றாக்குறையான திட்டங்-களை, கலெக்டர் கள ஆய்வு செய்து, பொது மக்கள் பயன்-பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

